விருத்தாசலம்: செல்போன் கடையில் 17 வயது பெண் தற்கொலை – காவல்துறை விசாரணை. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 22 September 2025

விருத்தாசலம்: செல்போன் கடையில் 17 வயது பெண் தற்கொலை – காவல்துறை விசாரணை.


விருத்தாசலம், செப். 22 | புரட்டாசி 06:

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ஜங்ஷன் சாலை பகுதியில் உள்ள அனு மொபைல்ஸ் என்கிற தனியார் செல்போன் கடையில் 17 வயது மாணவி தற்கொலை செய்தது.


எருமனூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் வளர்மதியின் மகள் தர்ஷினி வி.மாணவர், விருத்தாசலம் அரசு கொளஞ்சியப்பர் கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவர் முதல் ஷிப்ட் முடிந்தவுடன் கடையில் பகுதி நேர பணியில் இருந்தார்.


நேற்று ஞாயிற்றுக்கிழமை, கழிவறைக்கு சென்றதாக கூறி அவர் நீண்ட நேரம் திரும்பி வராததால் கடை உரிமையாளர் கண்ணோட்டம் எடுத்த போது தூக்கிட்டு தொங்கிய நிலையில் கண்டுபிடித்தார். உடனடியாக தகவல் அளிக்கப்பட்டு விருத்தாசலம் காவல்துறை அதிகாரிகள் உடனே வந்து தர்ஷினியின் உடலை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பினர்.


விருத்தாசலம் காவல்துறை சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Permalink:

No comments:

Post a Comment

*/